rc@humanlink.lk +94 67 5677714 -5

கடந்த ஏப்ரல் 27ம் திகதி எமது சிறுவர் வளப்படுத்தல் வளாகத்தில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகள் சிறப்புற நிறைவுபெற்றன.

2024-04-27 | admin




1. மூன்று மாதத்துக்கொருமுறை நடைபெறும் எமது நிர்வாக சபை கூட்டம் தவிசாளர் அஷ் ஷெய்ஹ் ஹசன் ஸியாத் தலமையில் 12 உறுப்பினர்களின் பங்கேற்றலுடன் காலை 9 மணி முதல் பகல் 2மணிவரை நடைபெற்றது. இதில் கடந்த ஜனவரி - மார்ச் 2024 வரையான வளர்ச்சி மீளாய்வும். அடுத்த 3 மாதத்துக்கான திட்டமிடலும் செவ்வனே நிறைவேற்றப்பட்டன.

>>>


2. Stakeholder Meeting - மருதமுனையிலுள்ள அனைத்து பள்ளிவாசல், பாடசாலை, சமூக அமைப்புகள், விளையாட்டு கழகங்கள், ஜம்மியத்துல் உலமா, அரபுக் கல்லூரி, சமூக தொண்டு நிறுவனங்கள், மீடியா, மற்றும் வைத்தியசாலை போன்றன அழைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வு மாலை 6.30-9.00 மணிவரை தலைவர் றொஷான் கமர்டீன் மற்றும் தவிசாளர் அஷ் ஷெய்ஹ் ஹசன் ஸியாத் தலமையில் நடைபெற்றது. இதில் எமது சேவைகள் பற்றி விளக்கப்பட்டதுடன் எதிர்கால பொதுவான வேலைத்திட்டத்துக்கான முன்மொழிவுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.           

>>>


3. மர்ஹூம்களான M.C.சைனுலாப்தீன் தம்பதிகளின் நினைவாக அவர்களின் குடும்பத்தால் நிலையான தர்மமாக நிர்மாணிக்கப்பட்ட திறந்த அரங்கு அவர்களின் மூன்று புதல்வர்களால் அன்று மாலை மாணவர்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.    

>>>

   

மாற்றுத்திறனாளி குழைந்தைகள், வழர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக எம்முடன் இணைந்திடுங்கள்.


Humanlink Maruthamunai